அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு திங்கள்கிழமை (ஏப்.22) மீண்டும் தொடங்குகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 11:48 pm IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது.

19 உறுப்பினர்கள் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 18 உறுப்பினர்கள் கொண்ட திமுக ஆகிய கட்சிகளின் ஆதரவை இழந்துள்ள காங்கிரஸýக்கு இந்த கூட்டத் தொடர் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூத்த மத்திய அமைச்சர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

22 எம்.பி.க்கள் உள்ள சமாஜவாதி கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தரவில்லை என்றாலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உதவிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு மக்களவையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.

மத்திய பட்ஜெட், லோக்பால் மசோதா, உணவுப் பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நீதித் துறை சீர்திருத்த மசோதா, வருங்கால வைப்புநிதி ஒழுங்காற்று ஆணைய மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.