/

காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா?: நாராயணசாமி பதில்

பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு

Updated On :1 ஜூன் 2013, 9:47 am

இன்று காலை தில்லியில் இருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி விமான நிலையத்தில் கூறியதாவது:-

பாராளுமன்ற மேல்- சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கேட்டுள்ளதா என்று எனக்கு தெரியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 9 ஆண்டு காலம் முக்கிய அங்கம் வகித்துள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு சிறந்த நட்பு கட்சியாக திகழ்ந்தது. இலங்கை பிரச்சினையில் சிறு மன கசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது.மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவையும் திரும்ப பெற்றது. மேல்-சபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி ஆதரவை தி.மு.க. கோரினால், அதை சோனியா பரிசீலனை செய்து முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.