வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் : அன்புமணி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 6:35 am

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  உடனே திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 பைசாக்களும், டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசாக்களும்  உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உள்ளூர் வரிகளையும் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 95 பைசா உயர்ந்து ரூ. 66.85 ஆகவும், டீசல் விலை 61 பைசா உயர்ந்து ரூ. 53.53 ஆகவும் உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும். ஆனால், உலக சந்தையில் கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது  மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத புதிய வழக்கமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாள் தோறும் மாறக்கூடியது. எனவே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கான காரணியாக ரூபாய் மதிப்பைக் கருதக் கூடாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாகும். எனவே, ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.