மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் சாவு

சிரியாவில் அதிபர் பஷார் அல் - அஸாதின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் இன்று டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கம் அருகே உள்ள காவல்

Updated On :11 ஜூன் 2013, 10:04 am

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் - அஸாதின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் இன்று டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கம் அருகே உள்ள காவல் நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, ""ஒரு குண்டுவெடிப்பு காவல் நிலையத்துக்குள்ளும், வெளியே மற்றொரு குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.