ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உத்தர்கண்டில் இலவச ரேஷன், வட்டிச் சலுகை : விஜய் பகுகுணா

உத்தர்கண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன், மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

Updated On :1 ஜூலை 2013, 9:32 am

உத்தர்கண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன், மின்சார கட்டணத்தில் இருந்து விலக்கு என பல்வேறு சலுகைகளை மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

இன்று டேஹ்ராடூனில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுடன் இணைந்து, மாநில மறுகட்டமைப்பு, மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன் அளிக்கப்படும். மின்சார கட்டணத்தில் இருந்த விலக்கு, வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வட்டி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.

உத்தர்கண்ட் மறுவாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, அது, மாநிலத்தின் மறு நிர்மாணப் பணிகளை கவனிக்கும். நதிக்கரையோரங்களில் இனிமேல் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படாது என்று கூறினார்.

உத்தர்கண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று கூறினார் விஜய் பகுகுணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.