நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றிலேயே பார்வையாளர்களால் மிகவும் அதிக அளவில் பார்க்கப்பட்ட போட்டியை ஜியோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image

ஐபிஎல் கோப்பை - படம்: எக்ஸ் / ஐபிஎல்.

Updated On :16 ஜூன் 2026, 5:26 pm IST

ஐபிஎல் வரலாற்றிலேயே பார்வையாளர்களால் மிகவும் அதிக அளவில் பார்க்கப்பட்ட போட்டியை ஜியோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அண்மையில் நிறைவடைந்தது. அதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியே ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டியாக சாதனை படைத்துள்ளதாக ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஜியோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு டாடா ஐபிஎல் தொடர் 120 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அண்மையில் நிறைவடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அளவிலான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டியை 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

JioStar has announced the most-watched match in the history of the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.