ஊத்துக்கோட்டை புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகபூசனம் (23). விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகபூசனம் சீர்வரிசையாக வழங்கப்பட்ட 6 பவுன் நகையை அடகு வைத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் நாக பூசனம், அவரது அக்கா கோவிந்தம்மாள், அவரது கணவர் முனுசாமி, உறவினர்கள் கருணாகரன், நாகவள்ளி ஆகிய 5 பேரும் சேர்ந்து சரளாவை அடித்து சித்ரவதை செய்தனர். ரூ. 1 1/2 லட்சம் வரதட்சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்துவேன் என்று சரளாவிடம் நாகபூசனம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சரளா ஊத்துக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி வழக்குப்பதிவு செய்து நாகபூசனம் உள்பட 5 பேரை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

