இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நிலக்கரி ஆவணங்கள் மாயம் : நாடாளுமன்றத்தில் கடும் அமளி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:24 pm IST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 11 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும், பாஜக உறுப்பினர் ரவி ஷங்கர் பிரசாத், காணாமல் போன ஆவணங்களை தேடவும், அது குறித்து விசாரணை நடத்தவும் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டார்.

கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கோரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமெழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இதே நிலைதான் மக்களவையிலும் நீடித்தது. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.