தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கணவன் இறந்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் ஓடப்பட்டி தாலுகா அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாக்கியம் (45). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்

Updated On :11 செப்டம்பர் 2013, 9:17 am

தேனி மாவட்டம் ஓடப்பட்டி தாலுகா அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாக்கியம் (45). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொழிலாளிகளாக பணியில் சேர்ந்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நேசமணி நகர் அருகே உள்ள பழைய ஸ்டேட் பாங்கி காலனியில் சகாயராஜன் (43) என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென காளியப்பன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். இதில் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட பாக்கியம் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சகாயராஜன் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஜெயா பிரின்சி, சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.