தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மெக்சிகோவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 8 பேர் சாவு

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.மெக்சிகோவின் கிழக்கு மெக்சிகன் மாகாணத்தில் மன்ஜானாடிட்லா நகரில் திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலச்சரிவு

Updated On :11 செப்டம்பர் 2013, 10:26 am

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.மெக்சிகோவின் கிழக்கு மெக்சிகன் மாகாணத்தில் மன்ஜானாடிட்லா நகரில் திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பிரதேசமான இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகளை மண் மூடின. இந்த வீட்டில் வசித்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்ததாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.தகவலறிந்து அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.மழை தொடர்வதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.