எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே ஒஎன்ஜிசி நிறுவனம் அருகே தீ: தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

புவனகிரி அருகே பெருமாத்தூர் பகுதியில் ஒஎன்ஜிசி நிறுவனம் கேஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எடுக்கப்படும் கேஸ் கெயில் நிறுவனம் மூலம் நிலத்தில்

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 12:53 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே புவனகிரி அடுத்துள்ள ஒஎன்ஜிசி கேஸ் எடுக்கும் நிறுவனத்திற்கு அருகே ஏற்பட்ட தீயினை சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

புவனகிரி அருகே பெருமாத்தூர் பகுதியில் ஒஎன்ஜிசி நிறுவனம் கேஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எடுக்கப்படும் கேஸ் கெயில் நிறுவனம் மூலம் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பைப்புகள் வழியாக வடலூர் வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு அருகாமையில் உள்ள தரிசு நிலத்தை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் தீப்பரவி கேஸ் பைப்புகள் பாதித்து பெரும் தீவிபத்து ஏற்படும் என்பதால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தரிசு நிலத்தில் ஏற்பட்ட தீயிணை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.