இம்மாதம் 25ம் தேதி நடைப்பெற உள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.
சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருமலை ஏழுமலையானுக்கு 3 நாட்கள் வருடாந்திர வசந்தோற்சவம் நடைப்பெறுவது வழக்கம். 25ம் தேதி வியாழக்கிழமை பௌர்ணமி அன்று கடைசி நாள் வசந்தோற்சவ விழா என்பதால் அன்றைய தினத்தில் காலை மற்றும் ஈவ்னிங் பிரேக் தரிசனமும், 300ரூ விரைவு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
50ரூ சுதர்ஸன டிக்கெட்கள் முன் பதிவு செய்த 6,800 பேர் மட்டும் அன்றைய தினம் காலை 10 மணிக்குள்ளாக தரிசனத்திற்கு கோவிலுக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறினார். தர்ம தரிசனம் மற்றும் அனைத்து வகையான தரிசனங்களும் மதியம் 1.30 மணிக்கே முடிக்கப்படும்.
அந்நாள் வியாழக்கிழமை ஆனதால் மதியம் 3 மணிக்கு மஹா சுத்தி செய்து பூலங்கி சேவையை சார்த்திய பின் கோவில் மூடப்படும். பிறகு மறுநாள் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுப்ரபாத சேவைக்கு கோவில் திறக்கப்படும் என்று கூறினார். பக்தர்கள் இந்நேர மாற்றத்திற்கு தக்கபடி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும்படி வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


