கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சவூதி வேலைவாய்ப்பு சட்டம் நேர்மையான ஊழியர்களை பாதிக்காது

சவூதியில் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.

News image
Updated On :15 ஏப்ரல் 2013, 2:38 am

பெர்லின்

சவூதியில் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
 இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜெர்மன் பயணம் மேற்கொண்ட அவர் பெர்லினில் கூறியது: புதிய வேலைவாய்ப்பு சட்டம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டவர்க்கும் பொருந்தும்.
 வேலைவாய்ப்பு தேடி பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக சவூதியில் குடியேறியவர்களைத்தான் இந்த சட்டம் பாதிக்கும்.
 சவூதியின் பொருளாதாரத்துக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்கு கணிசமானது. இதை அந்நாட்டு அரசு உணர்ந்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதால், பல உண்மையான பணியாளர்கள் அங்கு சென்று பணியாற்ற முடியும் என்றார்.
 சவூதி அரசு "நிதாகத்' எனும் ஊழியர் பாகுபாடுச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இதன்படி ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் பத்து சதவீத அளவு சவூதி குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 மேலும் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும் இச்சட்டத்தின் கீழ் கடுமையான விதிமுறைகள்
 உள்ளன.
 இந்த சட்டத்தினால் லட்சக் கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. இது குறித்துப் பேச வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி சவூதி செல்ல இருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.