விருதுநகரில் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணத்தை பறித்த ரவுடியை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் ராமன் காலனியைச் சேர்ந்தவர் கனி(26). இவர், அல்லம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ.950 ஐ பறித்துக் கொண்டு சென்றார். உடனே இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் கனி புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.