/

லால்குடி அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெட்ரோல் ஊற்றி அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2013, 7:05 am

ராஜேஷ் கண்ணன்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெட்ரோல் ஊற்றி அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

லால்குடி ரயில்வே நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து லால்குடி போலீஸாரும் ரயில்வே போலீஸாரும் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அந்தப் பெண் லால்குடியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.