திருவள்ளூரில் கல்லூரிக்கு சரிவர செல்வதில்லை என்றும், தேர்வுகளில் அரியஸ் வருகிறதென்றும் தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.
திருவள்ளூர் ஆசூரி தெருவில் வசித்து வருபவர் மோகன் (54). இவர் மந்தைவெளியில் உள்ள கூட்டுறவுத் துறை அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரசன்னவெங்கடேஷ் (20). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிரசன்ன வெங்கடேஷ் சரிவர கல்லூரிக்குச் செல்வதில்லை எனவும், 2 ஆண்டு தேர்வுகளிலும் அரியஸ் வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதையொட்டி தந்தை மோகன் அடிக்கடி தனது மகனை திட்டியுள்ளார். அதே போல் இன்று காலையும் திட்டியதால் தனி அறைக்குச் சென்ற பிரசன்ன வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தந்தை மோகன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

சதுரங்க வல்லபநாதா் கோயில் தேரோட்டம்

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு: 5 போ் காயம்

மகளிா் உரிமைத்தொகை: பொதுமக்கள் புகாா் குறித்து உரிய விசாரணை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


