சாலை விபத்தில் இலங்கை அகதிகள் முகாம் வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமி மகன் சுதர்சன் என்கிற ரோஷன். இவரும் அதே முகாமை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார்(30) என்பவரும் வேலை விஷயமாக


கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுதர்சன்(30) பலியானார்.
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமி மகன் சுதர்சன் என்கிற ரோஷன். இவரும் அதே முகாமை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார்(30) என்பவரும் வேலை விஷயமாக செங்குன்றம் பகுதிக்கு சென்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே பனப்பாக்கம் பகுதியில் இவர்கள் இருவரும் பைக்கில் முகாம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார்.பைக் ஓட்டி வந்த சாந்தகுமார் பலத்த காயத்துடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...