திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவரைத் த தாக்கியதாக 10 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூர் சிவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (21). பெருமாள்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, புட்லூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவிகளை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கேலி செய்தனராம். இதனை ராஜ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை புட்லூர் ரயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ்குமாரை, பொய்யாமொழி, பரணிகுமார் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீஸார், இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


