திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தந்தையை மிரட்டிய மகன்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சொத்து தகராறில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்களை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2013, 5:35 pm

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சொத்து தகராறில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்களை போலீஸார் கைது செய்தனர்.

பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியை அடுத்துள்ள பிக்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குட்டி என்கிற சின்னப்பாநாயுடு(70). இவரது மகன்கள் திம்மராயன்(45) மற்றும் முனியப்பன்(35). இவர்கள் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

குட்டி தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். வீட்டை மட்டும் தனது பெயரில் வைத்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முனியப்பன், வீட்டையும் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டனராம். இதற்கு குட்டி மறுத்ததால் தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது முனியப்பன், தந்தையை கத்தியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து குட்டி பர்கூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன் மற்றும் திம்மராயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.