நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற தமிழகத் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை

தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Updated On :10 ஆகஸ்ட் 2013, 2:56 pm IST

தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டியும், தமிழ் வழிக்கல்வியையே முழுமையாக தொடர வேண்டும் எனவும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் இன்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வாயிலில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திருவள்ளூவன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் முனுசாமி வரவேற்றார். மாவட்ட மதிப்பியல் தலைவர் ராசமாணிக்கனார் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டச் செயலாளர் கு.சம்மந்தம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில் தமிழக அரசு உடனடியாக தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வையாபுரி, பிச்சாண்டி, சங்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.