செங்குன்றம் அருகே தனியார் நிலத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ. லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை செங்குன்றம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த ரெட்டைஏரி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செங்குன்றம் வனச் சரகர் மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாதவரம் போலீஸாருடன் செங்குன்றம் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது தனியார் நிலத்தில் 250 கிலோ எடை கொண்ட ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து செங்குன்றம் வனத்துறையினர் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து அதை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


