வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்பை: சொத்து தகராறில் இரட்டைக் கொலையா?: 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

அம்பாசமுத்திரத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டர், அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான

News image
Updated On :1 டிசம்பர் 2013, 1:02 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த ஓய்வுபெற்ற அரசு டாக்டர், அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பாசமுத்திரம் தெற்கு மாடத் தெருவை சேர்ந்த பூ. அருள் (74). திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசியில் பணி செய்து ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். இவரது மனைவி ஜான்சிராணி (65). இத்தம்பதியின் மூத்த மகள் ஜாய்புவனா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். 2 வது மகள் முத்துப்ரியா குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

முக்கூடலை சேர்ந்த அருள் தனது மனைவியுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக அம்பாசமுத்திரத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்தார். இருவரும் பட்டப்பகலில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.ஜான்சிராணி அணிந்திருந்த 9 பவுன் எடையுள்ள சங்கிலி, இரண்டரை பவுன் வளையல்களை மட்டும் கொலையாளிகள் திருடி சென்றுள்ளனர். வீட்டு பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள 30 பவுன் எடையுள்ள தங்கநகைகள், பணம் ஆகியவற்றை கொலையாளிகள் எடுக்கவில்லை.

பணம், நகைக்காக கொலை செய்திருந்தால், பீரோவில் இருந்த நகைகளையும் கொலையாளிகள் எடுத்து சென்றிருக்க வேண்டும். சொத்து பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர் பதிவு செய்த ரேகைகள், தடயங்களை வைத்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சந்தேகத்தின்பேரில், கொலை நடைபெற்ற வீட்டின் அருகில் சில தினங்களாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். எனினும் கொலைக்கான காரணம் தெரியவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.