நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை நீடித்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை நேரத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை நேரத்தில் இடியுடன் கடிய மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை நேரத்தில் மந்தமான வானிலை நீடித்தது.