மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன் இன்பராஜ் (42). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நாகர்கோவில் சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு இவரது

News image
Updated On :15 டிசம்பர் 2013, 12:10 pm

இன்பராஜ்

 தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு  பூட்டியிருந்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற அடையைளாம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 தூத்துக்குடி பிரையன்ட்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த காட்டுராஜா மகன் இன்பராஜ் (42). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நாகர்கோவில் சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, மடிக் கணினி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனர்.

 இதேபோல, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கரலிங்கம் மனைவி லட்சுமி (52) ,  பொன்ராஜ் ஆகியோர் வீடுகளிலும் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பொருள்களை திருடிச் சென்றனர். இருவரும் வெளியூரில் இருந்து வராததால் திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு தெரியவில்லை.

 அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.