சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த தையல் தொழிலாளி கைது
புதியம்புத்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் முருகவேல் (60). இவர், கடைக்கு வந்த 6 வயது சிறுமியை திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்


தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் 6 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த தையல் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதியம்புத்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் முருகவேல் (60). இவர், கடைக்கு வந்த 6 வயது சிறுமியை திங்கள்கிழமை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து தையல் தொழிலாளியான முருகவேலை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...