ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியருகே கோயில் பிரச்னையில் பூசாரி வீட்டில் இருந்த சிலைகள் கைப்பற்றப்பட்டு வருவாய் துறையிடம் ஒப்படைப்பு

பழனி அருகே கணக்கன்பட்டி தலைவாசல் அருகே ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் இருந்தது.  இக்கோயிலுக்கு 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 

News image
Updated On :25 டிசம்பர் 2013, 2:15 pm

என்.​ அங்​கு​பாபு

  பழனி அருகே கோயில் பிரச்னையில் பூசாரியின் வீட்டில் இருந்த சிலைகள் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

     பழனி அருகே கணக்கன்பட்டி தலைவாசல் அருகே ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான அருள்மிகு வீரமாத்தியம்மன் கோயில் இருந்தது.  இக்கோயிலுக்கு 170க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  தலைமுறை, தலைமுறையாக வழிபட்டு வந்துள்ளனர்.  இக்கோயிலை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சிலைகள் கோயிலின் பூசாரியான வீராச்சாமி என்பவர் வீட்டில்  வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வீராச்சாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பங்களை சுவாமி தரிசனம் செய்ய விடாமல் சிலைகள் தன்னுடையது என தெரிவித்து வந்துள்ளார்.  இதுகுறித்து கோயிலுக்கு உரிய குடும்பத்தினர் போலீஸாரிடமும், வருவாய் துறை அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர்.  இதுகுறித்து பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வு எட்டப்படவில்லை.  கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அனைவரும் வந்த நிலையில் வீராச்சாமி வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் பூசாரி வீராச்சாமி கோயில் சிலைகள் காணாமல் போனதாக போலீஸார் புகார் செய்துள்ளார்.  இதையடுத்து கோட்டாட்சியர்  சிலைகளை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உத்திரவிட்டார்.  அவரது உத்திரவின் பேரில் ஆயக்குடி போலீஸார் பூசாரி வீராச்சாமி வீட்டுக்கு சென்று பார்த்த போது வீராச்சாமி தலைமறைவான நிலையில் வீடு பூட்டி இருந்துள்ளது.  இதைத் தொடர்ந்து வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலைகள், பூஜைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த பல்வேறு அளவுள்ள திருவாச்சி சிலைகள், ராமர்,சீதை,லட்சுமணர் சிலை, பாட்டன்,பாட்டி, குதிரை சிலைகள், நாகர்சிலைகள், நாகர்தலை படங்கள், அரிவாள், பூஜைப் பொருட்கள், பெட்டிகள் ஆகியன உட்பட மொத்தம் 39 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.  பூசாரி வீட்டின் பூட்டை உடைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதால்  மேற்படி கிராமத்தில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.