திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தலித் பெண் புகார் மீதான போலீஸ் விசாரணை திருப்தியில்லை:  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான  போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர்

News image
Updated On :26 டிசம்பர் 2013, 2:43 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் தலித் பெண் புகாரின் மீதான  போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொம்மிடி அருகே வேப்பரமத்தூர் சேர்ந்தவர் தலித் பெண் சுதா. இவர் அதே பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக வேப்பமரத்தூரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினருக்கு சுதா குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது குறித்து டிச.5-ஆம் தேதி சுதா தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு புகார் மனு அளித்திருந்தார். இதன் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் தருமபுரி மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தலித் பெண் சுதா புகார் தொடர்பாக தருமபுரி மாவட்ட போலீஸார் நடத்திய விசாரணை மற்றும் மேற்கொண்ட நடவடிக்கையில் திருப்தியில்லை எனவும், இந்த புகார் தொடர்பாக முறையான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி ஆணையம், தருமபுரி மாவட்ட எஸ்பி ஆஸ்ராகர்க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.