ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முஷாபர்நகர் முகாமில் வசிக்கும் 30 குடும்பத்தினர் மீது சட்ட விரோத  வழக்கு

கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதே மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில்

News image
Updated On :27 டிசம்பர் 2013, 9:40 am

வேல்முருகன்

கடந்த செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதே மாநிலம் முஷாபர்நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் வீடுகளை இழந்த பல் அரசு அமைத்த முகாமில் தங்கியிருந்தனர்.

கலவரம் குறைந்து படிப்படியாக மக்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பி வருகின்றர். தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கலவரத்தில் பாதிக்கப்படாத  30 குடும்பத்தினர் முகாமில் அரசு இடத்தை ஆக்கிரமித்து தங்கியுள்ளதாக கூறி, அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து  சப்டிவிசனர் மாஜிஸ்த்ரேட் ரஜினிகாந்த் கூறுகையில்

கினோனி கிராமத்தைச் சேர்ந்த சிலர், கலவரத்தில் பாதிக்கப்படவில்லை. ஆனால் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாமில் தங்கியுள்ளனர் என்றார். அவர்கள் மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்ததாக வழக்கு தொடரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.