இது குறித்து காவல் ஆய்வாளர் ஏ.டி.சக்கரவர்த்தி, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சின்னக்கருப்பன் மகன் ஆசைத்தம்பி, சண்டியர் குருவையா, பெருமாள் மகன் மாரிமுத்து, சுப்பையா மகன் முருகன், செல்வராஜ் மகன் ஆசைத்தம்பி, சின்னக்கருப்பன் மகன், ஆசைத்தம்பியின் உறவினர்கள் சுமார் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்து மூவரை கைது செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, கோட்டையூர், தெற்குத் தெரு வீரணன் மகன் குருவையா (40) என்பவர் கோட்டையூர் மந்தை அருகே இருந்த போது தன்னை சார்பு ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் தலையில் உருட்டுக்கட்டையால் அடித்ததாக புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் சார்பு ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.