அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சண்முகவேல் (59), இவரது மனைவி ஜானகி (40) எஸ்.ராமச்சந்திரபுரம், நரிபாறை தெருவில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். ஜானகி, முதலமைச்சர் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை பெற்று, அதை ரூ.3 லட்சம்

News image
Updated On :3 பிப்ரவரி 2013, 1:13 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சண்முகவேல் (59), இவரது மனைவி ஜானகி (40) எஸ்.ராமச்சந்திரபுரம், நரிபாறை தெருவில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். ஜானகி, முதலமைச்சர் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை பெற்று, அதை ரூ.3 லட்சம் செலவில் விரிவுபடுத்தியுள்ளார்.

இதனை கணவர் சண்முகவேல், மனைவி தவறான வழியில் பணம் சம்பாதித்து கட்டியதாகக் கருதி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் வைத்திருந்த கத்தியால் மனைவி ஜானகியை குத்தியுள்ளார்.இது குறித்து ஜானகி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சண்முகவேலை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.