ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளம், அருந்ததியர் காலனி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மு.பால்பாண்டி (25). இவரது மனைவி பாண்டியம்மாள் (23). பால்பாண்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 22.1.13-ம் தேதி பாதயாத்திரையாகச் சென்றுள்ளார். செல்லும் போது மனைவி பாண்டியம்மாளிடம், 25-ம் தேதி ஊர்காரர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து வா என்று கூறிச் சென்றுள்ளார். ஆனால் கோயிலுக்கு பாண்டியம்மாள் வரவில்லையாம். 27-ம் தேதி ஊர் திரும்பிய பால்பாண்டி பல இடங்களில் தேடியும், விசாரித்துப் பார்த்தும் மனைவி கிடைக்கவில்லையாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.