அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை

News image
Updated On :4 பிப்ரவரி 2013, 1:32 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞரை சிலர் கடத்திச் சென்றுள்ளதாக அவர் தந்தை போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மு.ராமர் (53). இவரது மகன் ராஜதுரை (22). இவர் கோயமுத்தூர், வீரையன்பாளையத்தில் உள்ள ரீபா இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள தாமிர வயர்களை திருடிவிட்டாராம். இது குறித்து தந்தை ராமருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அவர் அங்கு சென்று ரூ.4 லட்சம் கொடுத்து மகன் ராஜதுரையை மீட்டு வந்துள்ளார்.

வீட்டில் இருந்த ராஜதுரை 8.1.13-ம் தேதி முதல் காணவில்லையாம். இது குறித்து அவரது தந்தை ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், கோயமுத்தூரில் வேலை பார்த்த நிறுவனத்தின் பரணி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தனது மகனை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.