மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருக்கோவிலூரில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
Updated On :11 பிப்ரவரி 2013, 7:39 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூரில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்பட்ட மின் தடை நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை தடைபடும் மின்சாரத்தால் தண்ணீரின்றி கரும்புப் பயிர்கள் கருகிப் போவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், கருகிப் போன கரும்பு பயிர்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் தலைமையில், மின் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.