திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On :14 பிப்ரவரி 2013, 1:40 pm IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மருதூர் கீழக்கால் பகுதியில் விவசாயத்துக்காக அரசு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், 90 நாட்களில் நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பயிர்கள் கருகின. விவசாயத்துக்குத் தேவையான நீர் இல்லாமையால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூடுதலாக நீர் திறக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மருதூர் கீழக்கால் விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் வந்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துணை வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்தார். ஆனால், மாவட்ட ஆட்சியருடன் வட்டாட்சியர் வரும் வரை தாங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறிய விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.