விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 8:10 am

ஏ.தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தை காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மருதூர் கீழக்கால் பகுதியில் விவசாயத்துக்காக அரசு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், 90 நாட்களில் நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பயிர்கள் கருகின. விவசாயத்துக்குத் தேவையான நீர் இல்லாமையால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூடுதலாக நீர் திறக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், அது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மருதூர் கீழக்கால் விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் வந்து, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துணை வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்தார். ஆனால், மாவட்ட ஆட்சியருடன் வட்டாட்சியர் வரும் வரை தாங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறிய விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.