டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் கண்டனம்

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50-ம் , டீசல் விலையை லிட்டருக்கு 50பைசாவும் உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் நலனில் தங்களுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறைநிரூபித்திருக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:28 am

அரவிந்தன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50-ம் , டீசல் விலையை லிட்டருக்கு 50பைசாவும் உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களின் நலனில் தங்களுக்கு எந்தஅக்கறையும் இல்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறைநிரூபித்திருக்கிறது.மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடித்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் உயர்ந்துவிட்டன.

இந்த விலை உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது தாங்க முடியாத சுமையை மத்திய அரசு சுமத்தியிருக்கிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக  கலால்வரிக் குறைப்பு, சுங்க வரிக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசுஎடுத்திருக்கவேண்டும்.  அதை விடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்களின் தலையில் சுமத்துவது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.