சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பீகார், ஜார்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணாமலைநகர் பகுதியில் தாங்கள் தங்கியுள்ள பகுதிகளான கொத்தங்குடித்தோப்பு, மாரியப்பாநகர், முத்தையாநகர், கே.ஆர்.எம்.நகர், வடக்கிருப்பு ஆகிய பகுதிகளை வடஇந்தியாவில் விமரிசியாக கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி விழாவை முன்னிட்டு 6 இடங்களில் சரஸ்வதி சிலை வைத்து கொண்டாடினர். சனிக்கிழமை மாலை சிலைகளை கரைக்க கொள்ளிடம் ஆற்றிற்கு சிதம்பரம் நகரம் வழியாக போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். அப்போது பொதுமக்கள் மீதும், குறிபபாக பெண்கள் மீதும் கலர்பொடிகளை தூவியும், மதுபாட்டில்களை குடித்துக் கொண்டு சென்றதை கண்டு மக்கள் முகம்சுளித்து அச்சத்துடன் சென்றனர்.