மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகங்கை பாஜக பிரமுகர் கொலையில் இருவர் சரண்

கடந்த 14ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கன்னங்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் படைவென்றான் என்பவர் சிலரால் வெட்டிப் படுகொலை

News image
Updated On :18 பிப்ரவரி 2013, 7:09 am

ரவி

கடந்த 14ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கன்னங்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் படைவென்றான் என்பவர் சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இவரது கொலை வழக்கில் தொடர்புடையதாக இருவர் இன்று காலை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் பொன்னுடையான் (35), மற்றும் சிவகங்கை மாவட்டம் கன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் மகன் மணி (40) இருவரும் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.