தமிழகஅரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் ஏமாற்று மற்றும் மோசடி அறிவிப்பாகும். 50 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தின் நிதி 90 விழுக்காடும், அரசு நிதி 5 விழுக்காடும் என அறிவித்துள்ளது. இதனால் 49 சதவீத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தமிழகஅரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரமும், தரிசாக போட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும் எனவும்,சிதம்பரம் அருகே நந்தீஸ்வரமங்களத்தில் இடிமின்னல் தாக்கி இறந்த சத்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமுற்ற மூவருக்கு தலா ரூ.1 லட்சமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூர் மாவட்டம் பணங்காட்டு காலனியில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்து செல்ல முடியால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அம்மக்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விடுதலை செழியன், சிறுத்தை கிட்டு ஆகியோர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வருகிறது. எனவே சிறுத்தைகள் மீதான தமிழக காவல்துறை அடக்குமுறை, ஒடுக்குமுறையை கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும்.