களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு நடைபயணம்

தேசிய நெடுஞ்சாலை எண். 47 ஐ அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டட் கட்சி சார்பில் கட்சி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.
Updated on
1 min read

தேசிய நெடுஞ்சாலை எண். 47 ஐ அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டட் கட்சி சார்பில் இன்று களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு கட்சி நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புறவழிச் சாலை அமைந்தால் 99 குளங்கள் மூடப்படுவதுடன் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் தற்போதைய தேசிய நெடுஞ்சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக்க வேண்டும். தற்போது பாழடைந்து காணப்படும், திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்தி நிலத்தடி நீரை நன்னீராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com