கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூச்சிமருந்து குடித்து கரும்பு விவசாயி தற்கொலை முயற்சி!

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உட்கார வைத்ததால் மனமுடைந்து பூச்சிமருந்து குடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2013, 4:40 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உட்கார வைத்ததால் மனமுடைந்து பூச்சிமருந்து குடித்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே வட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் (41). கரும்பு விவசாயியான இவர் தனது வயலில் பயிரிட்டுள்ள கரும்பினை வெளி மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு ஏற்றி அனுப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் வெளி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி அனுப்பக்கூடாது என பாஸ்கரை தடுத்து சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் விவசாயி பாஸ்கரை சோழத்தரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உட்கார வைத்து, பின்னர் வெளி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பக்கூடாது என எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனஉளச்சல் அடைந்த விவசாயி பாஸ்கர் வியாழக்கிழமை மாலை பூச்சி மருந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக கொண்டு வந்து சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.