ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மட்டெக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.இந்த சீஸனில் இரட்டையர் பிரிவுப் போட்டியில் சானியா பெற்ற முதல் பட்டம் இதுவாகும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சானியா, மட்டெக் ஜோடியும் ஜெர்மனியின் அன்ன-லீனா குரோன்பீல்டு, செக்.குடியரசின் குவெட்டா பெச்செக் ஜோடியும் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்த சானியா ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 4-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சானியா, மட்டெக் ஜோடி கோப்பையை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.