அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் லாரி மோதி சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற அவரது சகோதரி காயம் ...

News image
Updated On :13 ஜனவரி 2013, 12:30 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பெண் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற அவரது சகோதரி காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சித்தாலம்புத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (40). இவரும் இவரது சகோதரி முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த ராமர் மனைவி சந்திரமதி (31) யும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை செல்ல முடிவு செய்திருந்தனர்.இன்று பாதயாத்திரையை தொடர்ந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் ஈஞ்சார் விலக்கு அருகே இவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரமதி காயம் அடைந்தார். லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

இது குறித்து சந்திரமதி, மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.