அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக விடுமுறையில் வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :15 ஜனவரி 2013, 3:14 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப பிரச்னை காரணமாக விடுமுறையில் வந்த ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சந்திக்கிணறு தெருவைச் சேர்ந்தவர் சேது மகன் ஆனந்தகுமார் (37). இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், சந்தனபாரதி, ஹர்ஷிதா என்ற இரு குழந்தைகளும் உண்டு. ஆனந்தகுமார், ராணுவத்தில் சிக்னல் பிரிவில் நாக்பூரில் நாயக் ஆக வேலை செய்து வந்தார். 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 20 நாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனைவி தேன்மொழி கணவருக்குத் தெரியாமல் தனது மகளுக்கு வரும் 20-ம் தேதி சந்தனமாரியம்மன்கோயிலில் மொட்டை போடப்போவதாக உறவினர்கள் அனைவருக்கும் கூறியிருந்துள்ளார். ஆனந்தகுமார் எனக்குத் தெரியாமல் எப்படி குழந்தைக்கு மொட்டை போடுவதை உறவினர்களுக்கு கூறலாம் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை தன்னுடன் நாக்பூர் வருமாறும் வலியுறுத்தியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே மனம் உடைந்த ஆனந்தகுமார் மொட்டமாடிக்குச் சென்று இரவு சாப்பிடாமல் கதவை பூட்டிக் கொண்டாராம். காலை அவரது தந்தை போய் கதவை தட்டி வெகு நேரம் ஆகியும் திறக்காததால், உடைத்துச் சென்று பார்த்த போது ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.