திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலி

சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.

Updated On :17 ஜனவரி 2013, 9:24 am

சாத்தூர் அருகே அரசு மணல் குவாரியில் மணல் சரிந்து ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. இந்த மணல் குவாரியில் வைப்பாற்றில் மணல் அள்ளியது போக சுற்றியுள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகளிடம் பல முறை தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், பட்டா நிலங்களில் மணல் அள்ளும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சங்கரன்கோயில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (31), மற்றும் மேலும் இருவர் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மணல் சரிந்து முத்துராமலிங்கம் மணலில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.