அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோதல்: இருவர் காயம்: நான்கு பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், துரையப்பன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (19). இவர் தனது நண்பர்களுடன் குன்னூரில் உள்ள தண்ணீர்

News image
Updated On :28 ஜனவரி 2013, 12:06 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். போலீஸார் நால்வர் மீது வழ்ககுப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர், துரையப்பன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன் (19). இவர் தனது நண்பர்களுடன் குன்னூரில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மணிகண்டனையும், அவரது தந்தையையும் தேவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ் என்பவர் தரக்குறைவாக பேசினாராம். இதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மணிகண்டன் தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் இதனை பிரகாஷிடம் சென்று கேட்டு வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் மணிகண்டனை வழிமறித்து ஆபாசமாகப் பேசி செங்கலால் தாக்கி பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து மணிகண்டன், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரகாஷின் தாய் கற்பகம் (45), கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு விவரம் வருமாறு: கற்பகம் தனது மகன் பிரகாஷ், மகள் அனுஷ்யாவுடன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன், ஜெயச்சந்திரன் மனைவி முத்து மற்றும் முனியம்மாள் ஆகியோர் வந்து ஆபாசமாகப் பேசினார்களாம். மேலும் பிரகாஷை, மணிகண்டன் கையால் தாக்கியதில் ஊமைக்காயம் ஏற்பட்டதாம்.குறித்தும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.