அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் நா.பாலகிருஷ்ணன் (55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார்.

News image
Updated On :30 ஜனவரி 2013, 10:52 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் வாசலில் இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் நா.பாலகிருஷ்ணன் (55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது தாய் நாச்சியார்,  நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வீட்டின் வாசலில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் முகவரி விசாரிப்பது போன்று நாச்சியாரிடம் விசாரித்துக்கொண்டே, அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்துச் சென்று விட்டாராம்.

இது குறித்து மகன் பாலகிருஷ்ணனிடம் நாச்சியார் கூறியுள்ளார். அவர் பல இடங்களில் நகையை பறித்துச் சென்ற நபரைத் தேடியும் கிடைக்கவில்லையாம். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.