டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது.

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :6 ஜூலை 2013, 6:26 pm

ராஜேஷ்

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த வாலிபரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் சனிக்கிழமை மாலை கொத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது கொத்தூர் இரயில்வே கேட் அருகே துப்பாக்கியை வைத்துக் கொண்டு நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காளிகான் வட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் தினேஷ்(21) என்பதும், அவர் எவ்வித அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து தினேஷ் மீது  வழக்கு பதிந்து அவரை திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.