டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய

News image
Updated On :12 ஜூலை 2013, 5:43 pm

ராஜேஷ்

பிரபல பெண் சாராய வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுபேட்டை கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(36) பிரபல சாராய வியாபாரி. இவர் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சாராயம் விற்பனை செய்தபோது நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அலமேலு கள்ளசாராயம் விற்பனை செய்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன் மீது விசாராணை நடத்திய மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் அலமேலுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அலமேலு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.