பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர்கள் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மாலை 6 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைந்தன. தேர்களுக்கு முன்பு வீதிகளில் தில்லைதிருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனம், இந்து ஆலய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.